மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை தாக்குதல்- மாவோயிஸ்டுகளுக்கு பெரும் அடி!
மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை தாக்குதலில் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் அடி கிடைத்திருக்கிறது.
கட்ச்ரோலி: மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் மட்டுமின்றி கடுமையான பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர் எல்லைகளில் விரிந்து பரந்து கிடக்கும் தண்டகாருண்ய, தண்டேவடா மலைகள்தான் மாவோயிஸ்டுகளின் மாபெரும் கோட்டையாக இருந்து வருகின்றன. நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படையின் முகாம்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் பீடி இலைகள்தான் மாவோயிஸ்டுகளின் பிரதான பொருளாதார பலம். ஆண்டுக்கு ரூ100 கோடி வரை மாவோயிஸ்டுகளுக்கு வருவாய் தரக் கூடியது இந்த வர்த்தகம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தாங்கள் பலவீனமாகவில்லை என்பதை இந்த வர்த்தகம் மூலம்தான் மாவோயிஸ்டுகள் வெளிப்படுத்தி வந்தனர். அத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் மீது தொடர் தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 37 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திராவதி ஆற்றில் அதிகாலையில் குளிக்க சென்ற மாவோயிஸ்டுகளை கூண்டோடு வளைத்து தாக்கியுள்ளது பாதுகாப்புப் படை.
இந்திராவதி ஆற்றில் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் சடலங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய தாக்குதல் மாவோயிஸ்டுகளுக்கு உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்தவில்லை. இந்திராவதி ஆற்று வனப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் பீடி இலை வர்த்தகத்தின் பிரதான சந்தைப் பகுதியும் கூட. இப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஊடுருவி நிலை கொண்டிருப்பது மாவோயிஸ்டுகளுக்கு பொருளாதார அடிப்படையிலும் கடும் பின்னடைவைத் தான் தந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications