மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை தாக்குதல்- மாவோயிஸ்டுகளுக்கு பெரும் அடி!
மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை தாக்குதலில் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் அடி கிடைத்திருக்கிறது.
கட்ச்ரோலி: மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் மட்டுமின்றி கடுமையான பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர் எல்லைகளில் விரிந்து பரந்து கிடக்கும் தண்டகாருண்ய, தண்டேவடா மலைகள்தான் மாவோயிஸ்டுகளின் மாபெரும் கோட்டையாக இருந்து வருகின்றன. நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படையின் முகாம்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் பீடி இலைகள்தான் மாவோயிஸ்டுகளின் பிரதான பொருளாதார பலம். ஆண்டுக்கு ரூ100 கோடி வரை மாவோயிஸ்டுகளுக்கு வருவாய் தரக் கூடியது இந்த வர்த்தகம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தாங்கள் பலவீனமாகவில்லை என்பதை இந்த வர்த்தகம் மூலம்தான் மாவோயிஸ்டுகள் வெளிப்படுத்தி வந்தனர். அத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் மீது தொடர் தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 37 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திராவதி ஆற்றில் அதிகாலையில் குளிக்க சென்ற மாவோயிஸ்டுகளை கூண்டோடு வளைத்து தாக்கியுள்ளது பாதுகாப்புப் படை.
இந்திராவதி ஆற்றில் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் சடலங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய தாக்குதல் மாவோயிஸ்டுகளுக்கு உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்தவில்லை. இந்திராவதி ஆற்று வனப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் பீடி இலை வர்த்தகத்தின் பிரதான சந்தைப் பகுதியும் கூட. இப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஊடுருவி நிலை கொண்டிருப்பது மாவோயிஸ்டுகளுக்கு பொருளாதார அடிப்படையிலும் கடும் பின்னடைவைத் தான் தந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications