மோடியை கொல்ல சதி?: ராஜஸ்தானில் 250 கிலோ வெடிபொருட்களுடன் 4 தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: ராஜஸ்தானில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் 250 கிலோ வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊடுருவி முக்கிய தலைவர்களை தாக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை குறி வைத்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மோடி போட்டியிடும் வாரனாசியில் நோட்டம் பார்த்துள்ளனர். அவர்கள் தேர்தல் நேரத்தில் வாரனாசியை தாக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 250 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஜெய்பூரில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் கயா, பாட்னா, ஹைதராபாத்தின் ஜாவேரி பஜார் மற்றும் தில்சுக்நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய வாக்கஸ் என்ற அகமது ஜாவிதும் ஒருவன். அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கஸ் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கலுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+