மலையாளம் தெரிந்தால் மட்டுமே இனி, கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு

நேற்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு வேலையில் சேரும் பொது பிரிவினருக்கான வயது வரம்பை 38 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இனி பொதுப்பிரிவினர் 41 வயது வரை அரசு வேலையில் சேரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 41 வயது என்பதை 44 வயது என்றும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 43 என்ற வயது வரம்பை இனி 46 என்று உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அமைச்சரவைக் கூட்டம் குறித்து அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி தெரிவித்ததாவது, ‘கேரளாவில் அரசு பணியில் சேருவதற்கு மலையாள மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. இது தொடர்பாக கேரள அரசு பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் போதுமான மாற்றங்கள் செய்யப்படும்.
அரசு பணியில் இனி மலையாளம் தெரிந்தவர்கள் மட்டுமே சேர முடியும். தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகளில் தமிழ் மற்றும் கன்னடம் தெரிந்து பணியில் இருப்பவர்கள் மலையாள மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
10-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு வரை மலையாள மொழி பயிலாதவர்களாக இருந்தால் அவர்கள் ‘சிறப்பு மொழி தேர்வு' எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்படும்.
தற்போது இந்த தகுதியை பெற 10 ஆண்டு கால நிர்ணயம் விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து நீடிக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications