மலையாளம் தெரிந்தால் மட்டுமே இனி, கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு

நேற்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு வேலையில் சேரும் பொது பிரிவினருக்கான வயது வரம்பை 38 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இனி பொதுப்பிரிவினர் 41 வயது வரை அரசு வேலையில் சேரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 41 வயது என்பதை 44 வயது என்றும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 43 என்ற வயது வரம்பை இனி 46 என்று உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அமைச்சரவைக் கூட்டம் குறித்து அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி தெரிவித்ததாவது, ‘கேரளாவில் அரசு பணியில் சேருவதற்கு மலையாள மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. இது தொடர்பாக கேரள அரசு பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் போதுமான மாற்றங்கள் செய்யப்படும்.
அரசு பணியில் இனி மலையாளம் தெரிந்தவர்கள் மட்டுமே சேர முடியும். தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகளில் தமிழ் மற்றும் கன்னடம் தெரிந்து பணியில் இருப்பவர்கள் மலையாள மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
10-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு வரை மலையாள மொழி பயிலாதவர்களாக இருந்தால் அவர்கள் ‘சிறப்பு மொழி தேர்வு' எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்படும்.
தற்போது இந்த தகுதியை பெற 10 ஆண்டு கால நிர்ணயம் விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து நீடிக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications