சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த மலையாள பெண் எழுத்தாளர்! மத்திய அரசுக்கு சங்கடம்
திருவனந்தபுரம்: நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து, கொலைகள் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி, மலையாள பெண் எழுத்தாளர் சாரா ஜோசப், தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் எழுத்தாளர் கல்பர்கி கொலை செய்யப்பட்டது, உத்தர பிரதேசத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததுதான் காரணம் என்று குற்றம்சாட்டும் எழுத்தாளர்களில் ஒரு பிரிவினர், தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி கொடுத்து வருகின்றனர்.

நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பேயி, ரகுமான் அபாஸ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பிக்கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள். இதில் தற்போது புது வரவாக சேர்ந்துள்ளார் கேரளாவை சேர்ந்த மலையாள பெண் நாவலாசிரியரும், எழுத்தாளருமான சாரா ஜோசப்.
சாரா ஜோசப், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கடந்த லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விருதுகளை திருப்பித்தருவோர், அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படும் எழுத்தாளர்கள் என பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. பீகார் தேர்தல் நெருங்குவதால், பாஜகவுக்கு நெருக்கடி அளிக்க மேற்கொள்ளப்படும் அரசியல் யுக்தி இது என அக்கட்சி கூறுகிறது.
இருப்பினும், எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பித்தருவது மத்திய அரசு மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவருவது உண்மையே.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications