அபச்சாரம்.. அபச்சாரம்... தவறி விழுந்த மலையப்ப சுவாமி.. திருப்பதியில் நடப்பது என்ன?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை மலையப்ப சுவாமி தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் நேற்று சகஸ்ர தீப அலங்கார சேவை நடைபெற்றது. இதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பட சுவாமி உற்சவர் சிலையை கருவறைக்கு அர்ச்சகர்கள் தூக்கி வந்தனர்.

அப்போது தங்க கதவு அருகே அர்ச்சகர் ஒருவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கையில் வைத்திருந்த மலையப்ப சுவாமி சிலையும் கீழே விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற அர்ச்சகர்கள் ஓடி வந்து மலையப்ப சுவாமியின் சிலை தூக்கி உள்ளே கொண்டு சென்றனர். சிலை கீழே விழுந்ததற்கு பரிகாரமாக தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்சிதலு, ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியா முன்னிலையில் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து தோஷ நிவர்த்தி பூஜை நடந்த பின்னர் சிலை கருவறையில் வைக்கப்பட்டது.
திருப்பதியில் சமீபத்தில் தலைமை அர்ச்சகர் ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பெருமாளுக்கு பூஜைகள் சரி வர செய்வதில்லை என்றும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் சிலை கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications