டெல்லியில் தலை, கைகள் இல்லாமல் கிடந்த ஆணின் சடலம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வடக்கு டெல்லியில் கைகள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்சா கல்லூரி அருகே அந்த பையை கண்டுபிடித்தனர். பையை திறந்து பார்த்தபோது அதில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பை கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
துண்டிக்கப்பட்ட தலை, கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications