‛‛ராகுல் காந்திக்கு ஆபத்து’’.. யாத்திரையில் மோதும் பாஜக-காங்கிரஸ்! அமித்ஷாவுக்கு கார்கே பரபர கடிதம்
கவுகாத்தி: அசாமில் பாரத் ஜடோ நியாய யாத்திரையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அம்மாநில போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட கோரி அமித்ஷாவுக்கு, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியிறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது. அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் 'பாரத் ஜடோ நியாய யாத்திரை' என இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொங்கியுள்ளார்.
இந்த யாத்திரை மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் நீள்கிறது. இறுதியாக மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.
பயண திட்டத்தின்படி மணிப்பூர், நாகலாந்தில் யாத்திரையை முடித்த அவர், கடந்த 18ம் தேதி அசாமில் யாத்திரையை தொடக்கினார். இம்மாநிலத்தில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கி.மீ தூரமும் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் அசாமில் அவர் நுழைந்ததிலிருந்து சலசலப்புகள் மேலெருந்திருக்கின்றன. கடந்த 19ம் தேதி யாத்திரை வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர்தான் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாடியது.
இதனை தொடர்ந்து நேற்று கவுகாத்தியில் ராகுல் காந்தியின் யாத்திரை நுழைய முயன்றபோது, காவல்துறை அனுமதி மறுத்தது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்று கூறி தடை விதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது காவல்துறைக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ராகுல் காந்தி உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
இந்த வழக்குப்பதிவில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கூறி வந்த நிலையில், அம்மாநில முதல்வரான பாஜகவின் ஹிமந்த பிஸ்வ சர்மா, “நான்தான் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டேன்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
எனவே அசாமில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்திக்கும், அவரது பயண குழுவினருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், பாஜகவினர் வேண்டும் என்றே ராகுல் காந்தியின் கான்வாய் அருகே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அசாம் காவல்துறையினர் உடந்தை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு ராகுல் காந்தி மற்றும் அவரது பயண குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
-
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications