நிதியை தராமல் இழுத்தடிப்பதா.. சீறிய மம்தா பானர்ஜி! மத்திய அரசை கண்டித்து 2 நாட்கள் தர்ணா
கொல்கத்தா: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிய மத்திய அரசை கண்டித்து, 48 மணி நேர தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகக் கடுமையாக சாடி வருகிறார். மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக விமர்சிக்கும் மம்தா பானர்ஜி, விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகவும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அண்மையில் பேசியிருந்தார்.
48 மணி நேரம் தர்ணா: இந்த நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிர 48 மணி நேர தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பேக்தர் சிலை முன்பாக தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ள மம்தா பானர்ஜி அங்கிருந்தபடியே தனது அரசு பணிகளையும் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள மம்தா பானர்ஜி, பாஜக மட்டும் இன்றி இந்தியா கூட்டணியையும் கடுமையாக சாடியுள்ளார். மம்தா பானர்ஜி கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக மேற்கு வங்காளத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லை.
சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்: வேலை செய்த பிறகும் மக்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் (மத்தியில் இருப்பவர்கள்) சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். அதிபர் முறையிலான ஆட்சி முறையை நோக்கி நீங்கள் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.. ஒரு கட்சி, ஒரு அரசாங்கம்.. ஒரே மொழி... தற்போது ஒருவர் என்ன உடை அணிய வேண்டும்.. என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்" என காட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications