ஐயம், ஸாரி நரேந்திர மோடி ஜி.. மமதா பானர்ஜி பரபரப்பு அறிக்கை
Recommended Video
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்காக நாளை இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனக்குப் பிடிச்ச அமைச்சர்கள் யார் யார்.. வாங்க ஜாலியா விளையாடலாம்!

கடும் மோதல்
மேற்கு வங்க மாநிலத்தை, பொறுத்தளவில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் சமயத்தில் கடும் வார்த்தை போர்களில் ஈடுபட்டன. மமதா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை கடும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். பதிலுக்கு இவர்களும், பதிலடி கணைகளைத் தொடுத்தனர்.

பதவியேற்பு விழா
இரு கட்சியினர் நடுவே ஆங்காங்கு பெரும் தேர்தல் வன்முறைகள் வெடித்தன. இந்தச் சூழ்நிலைக்கு நடுவேயும் டெல்லியில் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மமதா பானர்ஜி திட்டமிட்டிருந்தார். மம்தா பானர்ஜியின் இந்த ஒப்புதல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
|
மமதா பானர்ஜி மறுப்பு
இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மோடி பதவியேற்பு விழாவுக்கு தான் செல்லப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது: வாழ்த்துக்கள் புதிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களது அழைப்பை ஏற்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு நான் திட்டமிட்டிருந்தேன்.

அரசியல் இல்லை
ஆனால் கடந்த ஒரு மணி நேரமாக நான் பல்வேறு ஊடகங்களிலும் பார்க்கக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகளில், பாஜகவை சேர்ந்த 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் எதுவும் நடக்கவில்லை.

அரசியல் ஆதாயம்
இந்த கொலைகள் தனிப்பட்ட பகை காரணமாகவோ அல்லது குடும்ப தகராறு காரணமாகவோ அல்லது வேறு பிரச்சினைகள் காரணமாகவோ, நடந்து இருக்கலாம். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அதுபோன்ற எந்த ஆதாரமும் கிடையாது. எனவே 'ஐயம் ஸாரி நரேந்திர மோடி ஜி' நான் உங்களது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க போவது கிடையாது. இந்த விழா என்பது ஜனநாயகத்தை கொண்டாடக் கூடிய ஒரு திருவிழா. இதை அரசியல் ஆதாயத்துக்கு எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது. எனவே, ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ. இவ்வாறு மமதா பானர்ஜி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications