டெல்லி ரிசல்ட்டால் கூட்டணி கணக்கை மாற்றிய மம்தா பானர்ஜி.. “நாம் மட்டுமே போதும்”.. க்ளீயர் மெசேஜ்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக பிடிஐ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு சவாலாக உள்ளது. 2019, 2024 லோக்சபா தேர்தலில், அங்கு பாஜக, அதிக தொகுதிகளில் வென்றது. 2021 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 121 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து உள்ளது. இதனை அக்கட்சி தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள், டெல்லியை பிடித்து விட்டதால், அடுத்த மேற்கு வங்கத்தையும் பிடிப்போம் எனக் கூறி வருகின்றனர்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியைப் பறிகொடுத்துள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதுதொடர்பாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசுகையில், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் உதவவில்லை. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று விட்டது.
எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும். மாநிலத்தில் மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் 4-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்.
தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய அளவில் பா.ஜனதாவை கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும்" எனப் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
-
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?











Click it and Unblock the Notifications