நேதாஜி குறித்த அருண்ஜேட்லி ட்விட்டர் பதிவால் பெரும் கொந்தளிப்பு- மமதா பானர்ஜி அதிர்ச்சி!!
டெல்லி: நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து யுத்தம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே அவரது பற்றாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் இன்று நேதாஜி நினைவு நாள் என்று மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ட்விட்டரில் பதிவிட பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்படுவது உண்டு. ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட பல ஆவணங்களில் நேதாஜி இந்த விமான விபத்துக்குப் பின்னரும் உயிருடன் இறந்ததாக நம்பப்படுகிறது.

இது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும் மேற்கு வங்க மாநில அரசும் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தமது ட்விட்டர் பதிவில் நேதாஜி நினைவுநாள் எனக் குறிப்பிட்டு புகழஞ்சலி செலுத்தியிருந்தார்.
இதற்கு நேதாஜி குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத்தனைக்கும் அண்மையில் பாஜகவில் சேர்ந்த நேதாஜியின் உறவினரான சந்திரபோஸ் கூட, அருண்ஜேட்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசப்பட்டார்.
அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இன்று ரக்ஷா பந்தன் நாள்.. நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நேதாஜி தொடர்பான அருண்ஜேட்லிஜியின் இன்றைய காலை பதிவு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. எங்களை காயப்படுத்தி விட்டது என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அருண்ஜேட்லி அந்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவையே நீக்கிவிட்டார்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications