”பா.ஜ.க ஜெயிக்க விடமாட்டோம்” - மம்தா பானர்ஜி
பைலன்: பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் பாஜகவை ஜெயிக்க விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பாஜக கட்சி கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல எனவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தின் பைலன் பகுதியில் நேற்று நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பேசியபோது, "பாஜக கட்சி இதற்கு முன் ஆட்சியை பிடித்த சமயங்களில், தேவையான இடங்களை கைப்பற்ற வேண்டுமென அக்கட்சியினர் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை. எந்த காலத்தில் அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே கதை தான் இந்தமுறையும் நடக்கும். நாங்கள் பிரிவினைவாத அரசியலுக்கு ஆதரவு தரமாட்டோம்.
அதனால், மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் உட்பட எந்த ஒரு இடத்தையும் பாஜக கைப்பற்ற விட மாட்டோம். ஒரு இடத்தில் அவர்கள் வென்றாலும் மாநிலத்தை பிரித்து விடுவார்கள். பாஜக, காங்கிரஸ் இரு தேசிய கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது. மாற்று கூட்டணியால்தான் நிலையான ஆட்சியை தர முடியும். தேர்தலுக்கு பிறகு நாங்கள் மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிரூபிப்போம். மக்கள் ஆதரவு எங்களுக்கு உண்டு. அந்த ஆதரவுடன் 3 கூட்டணிகளையும் வெல்வோம்" என்று மம்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications