வெங்காயம், உருளை வேறு மாநிலங்களுக்கு கிடையாது: மமதா

வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாடெங்கும் அதன் விலை உயர்ந்தள்ளது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலைகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தீபாவளி பூஜையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் விலையை வியாபாரிகள் கடுமையாக உயர்த்தி விட்டனர். இதற்கு மாநில முதல்வர் மம்தாபானர்ஜி கடும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சில மொத்த வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு காய்கறி விலையை உயர்த்துகிறார்கள். துர்க்கா பூஜைக்கு முன்பே நான் அவர்களை எச்சரித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
சில வியாபாரிகள் தொடர்ந்து விலையை உயர்த்தியபடி இருக்கிறார்கள். விலையை உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உருளைக்கிழங்கை சில்லறை வியாபாரிகள் கிலோ ரூ. 13-க்கு விற்கலாம். மொத்த வியாபாரிகள் கிலோ ரூ. 11-க்கு விற்க வேண்டும்.
இதற்கு அதிகமாக விற்கும் வியாபாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கென போலீசில் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் வெங்காய உற்பத்தி போதுமான அளவுக்கு உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் கேட்கிறார்கள். மேற்கு வங்கத்தில் காய்கறி விலை சீராகும் வரை வெளி மாநிலங்களுக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றை கொடுக்க மாட்டோம் இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications