பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி கங்குலி மீது நடவடிக்கை- ஜனாதிபதிக்கு மமதா கடிதம்
கொல்கத்தா: பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி ஏ.கே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கங்குலி மீது சட்ட பயிற்சி மாணவி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறினார். இந்த புகார் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணையில் நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் நீதிபதி கங்குலி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் கங்குலி, மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications