மமதாவுக்கு புகழாரம்!: தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு வலை வீசும் ராகுல்!!
கொல்கத்தா: லோக்சபா தேர்தலுக்கு பின்பு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவைப் பெறும் வகையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் இன்னும் ஒரு கட்ட வாக்குப் பதிவுதான் இருக்கிறது. தேர்தலுக்கு பின் எப்படியான ஆட்சி மத்தியில் அமையும் என்பதற்கான லாபிகள் டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டினார்.
ராகுல் தனது பேச்சில், "மமதாஜி என் தந்தையுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அவர் மீது எனக்கு அளவற்ற மரியாதை இருக்கிறது. உண்மையிலேயே அவரை மரியாதைக்குரியவராக பார்க்கிறேன். 2011 தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து சட்டசபை தேர்தலை திரிணாமுல் எதிர்கொண்டது. ஆனால் அதன் பின்னர் எங்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
அவர் தூய்மையானை இதயம் கொண்டவர். மமதா பானர்ஜியுடன் இணைந்து எங்களால் செயல்பட முடியும் என புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications