மோடி பண மதிப்பிழப்பு செய்தாரே அப்போதுதான் வங்கியில் பெரும் மோசடிகள் நடந்துள்ளது: மம்தா பகீர்
கொல்கத்தா: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதுதான் பெரும்பாலான வங்கி மோசடி நடந்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டில், பெரிய அளவுக்கான பண மோசடிகள் பணமதிப்பிழப்பு நேரத்தில் நடந்துள்ளன. முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அப்படி நடந்த மோசடியின்போது யாரெல்லாம் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்கள்? இன்னும் பல வங்கிகளும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முழு உண்மை வெளியே வந்தாக வேண்டும்" என கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மோடி அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது. கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என அரசு கூறியிருந்தது. ஆனால் கருப்பு பணம் எந்த அளவுக்கு ஒழிந்தது என்பதை அரசு தெளிவாக இன்னும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், மக்கள் பெரும் துயரங்களுக்கு உள்ளானதுதான் மிச்சம்.
மேலும் வங்கிகள் எப்படி சாதாரண விவசாயிகள், சுய உதவி குழுக்களிடம் கடனுக்கு நெருக்கடி தருகின்றன என்பதையும், பெரிய பணக்காரர்கள் பண மோசடியில் ஈடுபடுவதையும் மக்களிடம் எடுத்து கூறி பிரச்சாரம் செய்யுமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பண மதிப்பிழப்பு நேரத்தில்தான் வங்கிகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications