இணைப்பை துண்டிச்சாலும் சரி.. மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க மாட்டேன்.. மம்தா அதிரடி!

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவே மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி விட்டார்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க மாட்டேன். என் மொபைல் எண் சேவையை துண்டித்தால் துண்டிக்கட்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுடன் இணைக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சிம் கார்டுகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Mamata says that she will not linking Aadhaar with mobile number

இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன். இது போல் வலியுறுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். மேலும் யாரும் அதுபோல் இணைக்காதீர்.

அவ்வாறு இணைக்கப்பட்டால் கணவன்- மனைவியிடையே நடைபெறும் உரையாடலும் அந்தரங்கம் இல்லாமல் போய்விடும். பொதுவெளிக்கு செல்லக் கூடாத வகையில் சில விஷயங்கள் உள்ளன. பொதுமக்களிடையே ஆதாரை கட்டாயமாக திணிப்பதை மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார் என்றார் அவர்.

இந்த கூட்டத்தில் பாஜகவை மம்தா கடுமையாக சாடினார். அத்துடன் அவற்றின் கொள்கைகளையும் விடாமல் விமர்சித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+