யாஸ் புயல் சேத ஆய்வு கூட்டம்.. பிரதமர், ஆளுநரை 30 நிமிடங்கள் காக்க வைத்த மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளுநர் ஜெகதீப் தன்கரையும் அரை மணி நேரம் முதல்வர் மம்தா பானர்ஜி காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாஸ் புயலால் கடந்த 26 ஆம் தேதி ஒடிஸா - மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கம், ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. அதிதீவிர புயலாகவே இது கரையை கடந்ததால் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தா சென்றிருந்தார். அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தன்கர், அதிகாரிகளுடன் மேதினிபூர் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம்
மம்தா பானர்ஜிக்கு இந்த கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தும் அவர் 30 நிமிடங்கள் தாமதமாகவே கூட்டத்திற்கு வந்தார். அங்கு யாஸ் புயல் சேத விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை ஒப்படைத்துவிட்டு நேற்று மதியம் நடந்த மற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்கு சென்றுவிட்டார். மேலும் திகாவில் மீட்பு பணிகளை பார்வையிட வேண்டும் என கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

நிவாரணம்
மத்திய அரசிடம் இருந்து ரூ 20 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளார் மம்தா. முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரை பிரதமருடன் ஆலோசனை நடைபெறும் இடத்திற்கு தாமதமாக தரையிறக்குமாறு முதல்வர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மீட்டிங்
அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது மீட்டிங் தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியை ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் அழைத்தது மம்தாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் அந்த கூட்டத்தை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

ஆளுநர் கண்டனம்
இந்த மீட்டிங் நேற்று மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நேருக்கு நேர் நடத்தப்பட்ட முதல் கூட்டம் இது. இதுகுறித்து ஆளுநர் தன்கர் கூறுகையில் மேற்கு வங்க மக்களின் நலனுக்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முதல்வரும் அவர் சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளாதது ஆட்சிக்கும் அரசியலமைப்பிற்கும் எதிரானது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications