புத்தி பேதலிச்சுப் போச்சா மமதா பானர்ஜிக்கு.. குஜராத் முதல்வர் பரபர தாக்கு!
அகமதாபாத்: மேற்கு வங்க மாநில முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, ஒரு மனநோயாளி போல நடந்து கொள்வதாக, குஜராத் முதல்வரான விஜய் ரூபானி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அப்போது திடீரென அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.

இந்த மோதல் சிறிது நேரத்தில் பயங்கர கலவரமாக வெடித்தது. கலவரத்தின் போது அங்கிருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது. வித்யாசாகர் சிலையை உடைத்தது பாஜக-வினர் தான் என்றும், இல்லை திரிணாமுல் காங்கிரசார் தான் என்றும் இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
ஆனால் இந்த வன்முறைக்கு பாஜக கட்சியினரே காரணம் என மம்தா புகார் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில் சம்பவம் குறித்து பாரதிய ஜனதாவை சேர்ந்த, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, சமீப காலமாக மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்து விட்டதாக கடுமையாக சாடினார். மன சமநிலையை இழந்ததன் மூலம், மனநோயாளி போல ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மம்தா பானர்ஜி தனது செல்வாக்கை இழந்து விட்டார் என்ற ரூபானி, அவர் ஜனநாயகத்தை களங்கப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மம்தாவின் இத்தகைய நடவடிக்கைகளை இந்திய மக்களாயினும், மேற்குவங்க மக்களாயினும் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டார்கள் என்றார்.
இதற்கெல்லாம் சேர்த்து மம்தாவுக்கு தேர்தலில் மேற்கு வங்க மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் முடிவுகள் மம்தாவுக்கு சரியான பாடத்தை புகட்டுவதாக அமையும் என ரூபானி குறிப்பிட்டுள்ளார்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications