புத்தி பேதலிச்சுப் போச்சா மமதா பானர்ஜிக்கு.. குஜராத் முதல்வர் பரபர தாக்கு!
அகமதாபாத்: மேற்கு வங்க மாநில முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, ஒரு மனநோயாளி போல நடந்து கொள்வதாக, குஜராத் முதல்வரான விஜய் ரூபானி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அப்போது திடீரென அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.

இந்த மோதல் சிறிது நேரத்தில் பயங்கர கலவரமாக வெடித்தது. கலவரத்தின் போது அங்கிருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது. வித்யாசாகர் சிலையை உடைத்தது பாஜக-வினர் தான் என்றும், இல்லை திரிணாமுல் காங்கிரசார் தான் என்றும் இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
ஆனால் இந்த வன்முறைக்கு பாஜக கட்சியினரே காரணம் என மம்தா புகார் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில் சம்பவம் குறித்து பாரதிய ஜனதாவை சேர்ந்த, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, சமீப காலமாக மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்து விட்டதாக கடுமையாக சாடினார். மன சமநிலையை இழந்ததன் மூலம், மனநோயாளி போல ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மம்தா பானர்ஜி தனது செல்வாக்கை இழந்து விட்டார் என்ற ரூபானி, அவர் ஜனநாயகத்தை களங்கப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மம்தாவின் இத்தகைய நடவடிக்கைகளை இந்திய மக்களாயினும், மேற்குவங்க மக்களாயினும் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டார்கள் என்றார்.
இதற்கெல்லாம் சேர்த்து மம்தாவுக்கு தேர்தலில் மேற்கு வங்க மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் முடிவுகள் மம்தாவுக்கு சரியான பாடத்தை புகட்டுவதாக அமையும் என ரூபானி குறிப்பிட்டுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications