ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து குணம் பெற வேண்டும்... பிரார்த்தனை செய்வதாக மம்தா பானர்ஜி டிவிட்..!
கொல்கத்தா: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து குணம் பெற வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நட்டா, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உரிய சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;
''பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து விரைந்து நலம் பெற வாழ்த்துகிறேன். ஜே.பி.நட்டாவுடனும் அவரது குடும்பத்தினருடனும் எனது பிரார்த்தனைகளும் உடனிருக்கும். '' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
கடந்த 4 நாட்களாக மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வரும் சூழலில் நட்டாவை வாழ்த்தி மம்தா டிவிட் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை கடந்த புதன்கிழமையன்று தொடங்கியிருந்தார் ஜே.பி.நட்டா.

அப்போது வியாழக்கிழமை அன்று ஜே.பி.நட்டா கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் மோதல் உருவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications