For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல இரவுகள் சோறு போடாமல் பட்டினி போட்ட மனைவி... வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் மூழ்கியதால் கொன்ற கணவர்

மேற்கு வங்க மாநிலத்தில் சோறு போடாமல் எப்ப பார்த்தாலும் வாட்ஸ் ஆப்பில் மூழ்கியிருந்த மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் மூழ்கியதால் மனைவியை கொன்ற கணவர்- வீடியோ

    கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ,கொல்கத்தாவில் பல இரவுகள் தனக்கு உணவு கூட அளிக்காமல் வாட்ஸ் ஆப்பே உலகம் என்றிருந்த மனைவி மீது சந்தேகம் அடைந்து கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

    கொல்கத்தாவில் சேட்லா எனும் இடத்தில் ஹௌரா ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சுராஜித் (42). இவரது மனைவி தும்பா பால் (36). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

    தும்பா பால் எந்த நேரமும் தனது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட்டு கொண்டிருப்பார். இதை கணவர் சுராஜித் கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    தும்பா பால் சடலமாக கிடந்தார்

    தும்பா பால் சடலமாக கிடந்தார்

    இந்நிலையில் தும்பா பால் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சுராஜித்திடமும் விசாரணை நடைபெற்றது.

    பேனில் துணி

    பேனில் துணி

    வீடு முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல் செட்டப் செயவதற்காக துணி ஒன்று இருந்தது. தும்பா பால் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததால் இந்த செட்டப்பை பார்த்த போலீஸார் சந்தேகமடைந்தனர். மேலும் சுராஜித்தின் கைகளிலும் காயம் இருந்தது.

    சுராஜித்திடம் விசாரணை

    சுராஜித்திடம் விசாரணை

    அப்போது சுராஜித்தின் இளைய மகனிடம் விசாரணை நடத்தியபோதுதான் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்பது தெரியவந்தது. அதுவும் தனது தந்தைக்கு தன தாயின் தங்கையுடன் தொடர்பிருப்பது தும்பா பாலுக்கு தெரிய வந்தவுடன் தகராறு அதிகரித்ததாகவும் இளைய மகன் கூறினார். மேலும் கொலை நடந்த அன்று தனது தந்தை அவருடைய பேகையும், செல்போனையும் வீட்டிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சுராஜித்துடன் விசாரணை நடத்தியதில் அவர்தான் தும்பாபாலை கொலை செய்தது தெரியவந்தது.

    சமையல் இல்லை

    சமையல் இல்லை

    இதுகுறித்து சுராஜித் அளிக்க வாக்குமூலத்தில், எனது மனைவி எப்போ பார்த்தாலும் செல்போனே கதி என்று கிடப்பார். இதனால் எனக்கு பல இரவுகளில் அவர் சாப்பாடு பரிமாறுவதையும் விட்டுவிட்டார். இதை பல முறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. மேலும் அவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. சம்பவதினத்தன்று எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தலையில் கத்தியால் குத்தியும் அவர் சாகவில்லை. எனவே அவரது கழுத்தை நெரித்து கொன்றேன். நானும் தற்கொலை செய்து கொள்ள கையை கிழித்துக் கொண்டேன், பேனில் துணியை மாட்டினேன் எனினும் சாவதற்கு எனக்கு தைரியம் இல்லாததால் விட்டுவிட்டேன். தும்பா பாலை திட்டமிட்டே கொன்றேன் என்றார்.

    English summary
    Police have arrested the husband Surajit Pal of homemaker Tumpa Pal, who was found murdered inside her rented residence in Chetla as he suspects his wife having an extra-marital relationship and that she was spending a lot of time on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X