For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் மத துவேஷ போட்டோக்களை ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டவர் கைது

By Siva
Google Oneindia Tamil News

Man arrested for posting offensive pictures on Facebook
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக புகைப்படங்களை வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் குமார். அவர் ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இதையடுத்து ஒரு மதத்திற்கு எதிராக புகைப்படங்களை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்கள் குவிந்தன.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் யோகேஷ் குமாரை கைது செய்தனர். யோகேஷ் வேறு ஒரு பெயரில் ஃபேஸ்புக் கணக்கு வைத்து பயன்படுத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மன்னர் சிவாஜி மற்றும் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட ஷேக் மொஹசின் சாதிக்(24) என்ற ஐடி நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A young man has been arrested for allegedly posting offensive pictures on social networking site Facebook, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X