மும்பையில் வெங்காயம் கேட்டவரை அடித்து நொறுக்கிய ஹோட்டல் ஊழியர்கள்!!

தெற்கு மும்பையில் உள்ள பைகுல்லாவில் இருக்கும் பிரின்ஸ் அலி கான் மருத்துவமனையில் பணிபுரிபவர் மயூர் பிராடி ஜாதவ்(23). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஷாலிமார் உணவகத்திற்கு சென்றார். அவர்கள் சிக்கன் வருவல் மற்றும் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்தனர்.
அவர்களுக்கு உணவுடன் ஒரு பிளேட் வெங்காயம் மட்டும் கொடுக்கப்பட்டது. அது போதவில்லை என்பதால் மேலும் வெங்காயம் கொண்டு வருமாறு ஜாதவ் வெயிட்டரிடம் தெரிவித்தார். வெகு நேரமாகியும் வெங்காயம் வராததால் ஜாதவ் வெயிட்டரை அழைத்து வெங்காயம் கேட்டார். அதற்கு வெயிட்டர் வெங்காய விலை ஏறிவிட்டதாக தெரிவித்தார். ஜாதவோ வெங்காய விலை குறைந்துவிட்டது என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மற்றொரு வெயிட்டர் வந்து ஜாதவின் சட்டையை பிடிக்க மற்றொருவர் உணவகத்தில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஷட்டரை மூடினார்.
பின்னர் வெயிட்டர்கள் ஜாதவை தாக்கினர். ஒரு வெயிட்டர் கண்ணாடி டம்ப்ளரை வீசியதில் ஜாதவின் கண் அருகே பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து ஜாதவ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் முகமது ரிஸ்வான் ஜியாவுத்தீன் அகமது மற்றும் ப்ரிஜ்பான் ஆசாராம் சிங் ஆகிய 2 வெயிட்டர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications