மேற்கு வங்கத்தில் மைனர் பேத்தியை சீரழித்து கர்ப்பமாக்கிய தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

டார்ஜிலிங்: மேற்கு வங்கத்தில் மைனர் பேத்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிங்காமரியைச் சேர்ந்தவர் மோகன் தாபா(50). அவர் தனது 15 வயது பேத்தியை கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அவரை தாத்தா வீட்டில் விட்டு விட்டு வேறு இடத்தில் வசித்தனர்.

இந்நிலையில் தாபா தனது மனைவி எப்பொழுது வெளியே சென்றாலும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியிடம் ஏதோ மாற்றத்தை பார்த்த பள்ளி ஆசிரியர் அவரிடம் விசாரித்தபோது தான் உண்மை வெளியே வந்தது.

இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதற்கிடையே போலீசார் தாபாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ரூ.50,000 அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+