3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 25 வயது இளைஞர்... போலீசில் பிடித்துக் கொடுத்த மக்கள்
மும்பை: மும்பையில் 3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் கர்கோவன் பகுதியில், திண்டோஷி என்ற இடத்தில் வசித்து வரும் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை அழுது கொண்டே இருப்பதை அவரது அக்கம்பக்கத்தார் பார்த்துள்ளனர். கூடவே அச்சிறுமியின் உடலில் இருந்து ரத்தம் வடிவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

முன்னதாக அச்சிறுமியின் உடன் இருந்த 25 வயது இளைஞரையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று அந்த இளைஞர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசாரிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். சிறுமி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்த இளைஞரும் அதே மருத்துவமனையில் சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications