பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பரபரப்பு.. 12வது மாடியில் இருந்து கீழே குதித்து ஊழியர் தற்கொலை
Recommended Video
பெங்களூர்: பணி செய்யும் இடத்தில் பனிரெண்டாவது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர் பெயர் பவேஷ் ஜெய்ஸ்வால் என்று தெரியவந்துள்ளது. 23 வயதாகும் இவர் மகாதேவபுரா அப்பகுதியில் வசித்து வந்தார்.
ஒயிட்பீல்டு ஐடிபிஎல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பிஸினஸ் அனலைசிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடமாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பவத்தன்று, 12வது மாடியில் உள்ள பாத்ரூமுக்கு ஜெய்ஸ்வால் சென்றுள்ளதும், அங்கே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் சக ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஜெய்ஸ்வாலின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு யாருக்காவது பேசினாரா, யாருக்காவது மெசேஜ் அனுப்பினாரா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் எதுவுமே கிடைக்கவில்லை. எனவே அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.