ஒடிசா: தாமதமாக டீ கொண்டு வந்த மனைவியைக் குத்திக் கொன்ற தாத்தா கைது
Subscribe to Oneindia Tamil
புவனேஷ்வர்: டீ கொண்டு வர தாமதமானதால் மனைவியை குத்திக் கொன்ற கணவரை ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவின் டென்கனல் மாவட்டத்தைச் சேர்ந்த குகாலிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலியா நாயக் (56). இவரது மனைவி ஜானா (55).
கடந்த புதனன்று காலையில் மனைவியிடம் குடிக்க டீ கேட்டுள்ளார் மகாலியா. ஆனால், டீயைக் கொண்டு வர சற்று தாமதப்படுத்தியுள்ளார் ஜானா. இதனால் ஆத்திரமடைந்த மகாலியா மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சண்டையால் அன்று உணவு சமைக்க மறுத்து கோபத்தில் இருந்துள்ளார் ஜானா. இரவும் சண்டை தொடர்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த மகாலியா, கூரிய ஆயுதத்தால் மனைவியைக் குத்திக் கொன்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகாலியாவைக் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் தனது குற்றத்தை மகாலியா ஒத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications