மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொடூரம்.. டெல்லி அருகே ஓடும் ரயிலில் இளைஞர் அடித்து கொலை

மாட்டிறைச்சி உண்டதாக டெல்லி அருகே ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் டெல்லி அருகே ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் மாட்டுக் கறி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்டார்.

ஹரியாணாவில் இருந்து டெல்லிக்கு 4 இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு துணிமணிகளை வாங்க வந்திருந்தனர். அப்போது அனைத்தையும் வாங்கிவிட்டு ஹரியாணாவுக்கு திரும்ப டெல்லி- பல்லப்கார் பயணிகள் ரயிலில் துக்லகாபாதில் ஏறினர்.

Man lynched over rumours of beef eating on Delhi-Ballabhgarh train route

அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒரு கும்பல் 4 பேரின் மீது கத்தி, கூர்மையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தும் யாரும் அவர்களை தடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மதுரா செல்லும் வழியில் உள்ள அசாவதி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து வீசினர். 4 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

மற்ற 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸாரையும் அவசர உதவி எண்ணை அழைத்தும் பலனில்லை என்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+