யூஎன்ஓ கார்ட் விளையாட்டில் தோற்றுப்போனதால் கொலை.. மும்பையில் இளைஞர் செய்த கொடூரம்
யூஎன்ஓ எனப்படும் குழந்தைகள் விளையாடும் கார்ட் விளையாட்டில் தோற்றுப்போனதால் மும்பை சேர்ந்த நபர் ஒருவர் தன் நண்பரை கொலை செய்து இருக்கிறார்.
மும்பை: யூஎன்ஓ எனப்படும் குழந்தைகள் விளையாடும் கார்ட் விளையாட்டில் தோற்றுப்போனதால் மும்பை சேர்ந்த நபர் ஒருவர் தன் நண்பரை கொலை செய்து இருக்கிறார்.
கொலை செய்த நூர் முகமது மன்சூரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அபுசார் அன்சாரி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவம் அங்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப்பட்டு இருக்கிறது. மன்சூரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்குமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வீடு
மும்பை சேர்ந்த 22 வயது நிறைந்த அபுசார் அன்சாரி நீண்ட நாட்களுக்கு பின் தன் பாட்டியை பார்க்க, மும்பையில் இருக்கும் இன்னொரு வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் யூஎன்ஓ எனப்படும் குழந்தைகள் விளையாடும் கார்ட் விளையாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்.

பிரச்சனை
அப்போது அங்கு அதே பகுதியை சேர்த்த அபுசார் அன்சாரி நண்பர் நூர் முகமது மன்சூரி வந்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த விளையாட்டை விளையாடியுள்ளனர். விளையாடும் போதே இருவருக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது.

கொலை செய்தார்
அன்சாரி விளையாடும் போது ஏமாற்றியதாக மன்சூரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனால்தான் அன்சாரி வென்றதாக சண்டை போட்டுள்ளார். சண்டை போடும்போதே கோவப்பட்டு மன்சூரி, அன்சாரியை கத்தியால் குத்தி உள்ளார். முகம், வயிறு, நெஞ்சு என பல இடங்களில் குத்தியுள்ளார்.

5 இடம்
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவருக்கு உடலில் 5 இடங்களில் காத்து குத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. மன்சூரி கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications