வயிற்றில் கத்தியால் கீறிய போராட்டக்காரர்.. காவிரி பந்த்தில் விபரீதம்.. தமிழர்கள் பீதி #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை எதிர்த்து பெங்களூரில் இளைஞர் ஒருவர் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார். கேஆர்எஸ் அணை அருகே 4 விவசாயிகள் தண்ணீரில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றனர்.
பெங்களூரில் மாநில தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ளது சுதந்திர பூங்கா. இங்கு காவிரி விவகாரம் குறித்து பல்வேறு அமைப்பினர் காலை முதல் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தில் பங்கேற்ற பெங்களூர் சோளூர்பாளையாவை சேர்ந்த பிரபு (30) என்ற இளைஞர், உணர்ச்சி வேகத்தில் திடீரென கத்தியால் தனது வயிற்றில் கீறிக்கொண்டார். இதனால் ரத்தம் வழிந்து ஓடியது. அதிர்ச்சியடைந்த சக போராட்டக்காரர்கள் அவரை காரில் ஏற்றி அருகேயுள்ள செயின்ட். மார்த்தாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ரத்தம் கொடுத்தாலும் கொடுப்பேன்.. தண்ணீர் விட்டுக்கொடுக்க மாட்டேன் என பிரபு கோஷமிட்டபடி மருத்துவமனைக்குள் சென்றார். இதனிடையே மண்டியா மாவட்டத்திலுள்ள கே.ஆர்.எஸ் அணை அருகே காவிரி நதியில் பாய்ந்து 4 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றனர். அதில் மூவர் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மைசூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு விவசாயியை தேடி வருகிறார்கள்.

அதே பகுதியில் மற்றொரு விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் கன்னட மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொந்தளிப்பு கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications