சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை: குவியும் பக்தர்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன்கோவில் மண்டலபூஜை நாளை நடைபெறுவதை ஒட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோவில் வருவாய் ரூ.120 கோடியை தாண்டியுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 41 நாட்களான மண்டல பூஜை காலம் நாளை நிறைவடைகிறது.
முக்கிய நிகழ்வான ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு நடைபெறும் சிறப்பு வாய்ந்த பூஜை நாளை நடக்கிறது. இதை காண சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தங்க அங்கி ஊர்வலம்
மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக ஆரன்முளாவில் இருந்து டிசம்பர் 22ம் தேதி ஏற்கனவே புறப்பட்டு விட்டது. அது சபரிமலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை கோயிலை அடையும்.
ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி 426 பவுன் எடை கொண்டது. இந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

மண்டலபூஜை
தங்க அங்கி வந்த பிறகு அவை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும். நாளை மாலை நடக்கும் மண்டல பூஜைக்கு பின்னர் இரவில் கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மகர விளக்கு கால பூஜைக்காக வரும் டிசம்பர் 30ம் தேதி மாலை கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.

பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்
இந்நிலையில் கடந்த வருடங்களை விட இந்த வருடம் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவில் வருமானமும் அதிகரித்துள்ளது.

ரூ. 120 கோடி
23ம் தேதி வரை கோயில் வருமானம் ரூ.120.40 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.20 கோடி அதிகமாகும். அரவணை பிரசாதம் மூலம் ரூ.47 கோடியும், உண்டியல் மூலம் ரூ.44 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.9 கோடியும் கிடைத்துள்ளது. மகர விளக்கு கால நேரங்களில் இந்த தொகை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications