மோடிக்கு அரிய வகை மரக் கன்று.. பிறந்தநாள் பரிசாக அளித்தார் மேனகா காந்தி
டெல்லி: பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக அரிய வகை மரக்கன்றை அளித்துள்ளார் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி.
கடந்த 17ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரதமர் மோடி. பிறந்தநாளையொட்டி மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உலக நாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி பிறந்த நாள் பரிசாக அரிய வகையான மரக் கன்று ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இந்த மரத்தின் இலைகள் கிண்ணம் போல குவிந்த நிலையில் காணப்படும். சிறுவயதில் கிருஷ்ணர் வெண்ணெயை திருடி மாட்டிக் கொண்ட போது, அதனை இந்த மரத்தின் இலையில் சுருட்டி மறைத்து வைத்ததாகவும், அதனாலேயே அந்த மரத்தின் இலைகள் கிண்ணம் போல குவிந்து இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்த மரம் டேராடூன் பகுதியில் மட்டும் விளைவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications