மணிப்பூரில் தீவிரவாதிகளின் தாக்குதல்- பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!!
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் பல இயங்கி வருகின்றன. இவர்களுடன் நாகாலாந்து தனி நாடு கோரும் ஆயுத குழுக்களும் உள்ளன.

இந்நிலையில் மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் மோதுல் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இம்பால் நோக்கி ராணுவ வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
20 Armymen martyred & 11 injured in ambush by unidentified militant outfit in Manipur's Chandel.
— ANI (@ANI_news) June 4, 2015 இதில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications