திடீரென குலுங்கிய பூமி.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.. ரிக்டரில் 3.8 ஆக பதிவு
இம்பால்: மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி, சிரியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 என பதிவாகி இருந்தது.

பல நாடுகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்
மேலும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது. பாகிஸ்தானில் அன்றைய தினம் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத் பகுதியில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. மேலும் சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 15க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

அதிர்ந்துபோன வடமாநிலங்கள்
இந்தியாவை பொறுத்தமட்டில் தலைநகர் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், காஷ்மீர், ஹரியானா உள்பட பல வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியில் நிலநடுக்கத்தை மக்கள் நன்றாகவே உணர்ந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 2.3 என நிலநடுக்கம் பதிவானது.

மணிப்பூரில் இன்று நிலநடுக்கம்
இந்நிலையில் தான் இன்று மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் இன்று மாலை 6.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில வினாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி, பாதிப்பு பற்றிய விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

உறுதி செய்த தேசிய மையம்
மேலும் மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நிலஅதிர்வுகளை பதிவு செய்யும் தேசிய மையம் உறுதி செய்துள்ளது. அதன்படி மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மொய்ராங்க் பகுதியில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 67 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications