Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா..'' மணிப்பூரில் ராகுல் காந்தி பேச்சில் எதிரொலித்த "ஒன்றிய அரசு"

Subscribe to Oneindia Tamil

இம்பால்: இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றும் இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. வரும் 28-ந் தேதியும் மார்ச் 5-ந் தேதியும் இங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மணிப்பூரில் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பாஜக மாநில கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் அதுபோல் நடக்காமல் இருக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, '' இந்தியாவின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று விவரித்தேன். இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை. அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலங்களின் ஒன்றியம் என நம்மை வரையறுத்தே தேர்வு செய்துள்ளோம்.

பாஜக‌

பாஜக‌

இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என பேசியதற்கு பாஜக மற்றும் அதன் சார்பு கட்சிகள் எனக்கு எதிராக பேசினார்கள். இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று நான் சொன்னது பிடிக்கவில்லையா அல்லது மற்ற எல்லாக் கருத்துகளையும், மொழிகளையும், மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்ந்த ஒரே சித்தாந்தம், ஒரே கருத்து, ஒரே மொழி என்பதுதான் பாஜகவின் பார்வையாக இருக்கிறது.

உணர்வு

உணர்வு

நான் இங்கு வரும்போது, நான் என்ற உணர்வுடன் வரவில்லை, பணிவுடன் வருகிறேன். ஏனென்றால் நீங்கள் கொடுக்க நிறைய இருக்கிறது, உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் பாஜக இங்கு வரும்போது மரியாதையுடன் வரவில்லை, புரிந்துகொண்டு வரவில்லை. அவர்கள் ஆதிக்க உணர்வுடன் வருகிறார்கள்.

மணிப்பூர் தேர்தல்

மணிப்பூர் தேர்தல்

மணிப்பூரில் 2002 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் ஆட்சிசெய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஓக்ராம் இபோபி சிங் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியை வலுவான கட்சியாக மாற்றினார். காங்கிரஸ் கட்சி மணிபூரில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது. 2017 தேர்தலிலும் காங்கிரஸ் தேவையான இடங்களைப் பெற்றிருந்தது. ஆனாலும் மாநில கட்சிகளைக் கைகோர்த்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது பாஜக தனியாக தேர்தலை சந்திக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+