சென்னை ராயபுரத்தில் நடுரோட்டில் கேஸ் வேன் ஓட்டுநர் அடித்துக்கொலை.. ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ராயபுரத்தில் நடுரோட்டில் கேஸ் லோடு வேன் ஓட்டுநர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். லோடு வேன் ஆட்டோ மீது மோதியதால் ஆத்திரத்தில் ஆட்டோ டிரைவர், வேன் டிரைவரை நெஞ்சில் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் கேஸ் லோடு வேன், எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் (32), லோடு வேன் ஓட்டுநரான ரகுவை (42) கடுமையாக மார்பில் குத்தியதில், சம்பவ இடத்திலேயே ரகு உயிரிழந்தார்.

வேன் ஓட்டுநரை தாக்கி கொலை செய்த மணிகண்டனை கைது செய்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications