Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நினைக்கிறாரா மோடி? யாத்திரை முதல் நாளே ராகுல் கடும் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் துயரங்களை அனுபவித்த போது அரவணைக்காத பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என நினைக்கின்றனரோ? என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான கேள்வியை எழுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல் காந்தி தமது 2-வது கட்ட யாத்திரையை தொடங்கி உள்ளார். பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் இன்று ராகுல் காந்தி தமது யாத்திரையை தொடங்கினார்.

Manipur is not a part of India? Rahul Gandhi Asks PM Modi

நாட்டின் 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 லோக்சபா தொகுதிகள், 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக ராகுல் காந்தியின் 2-வது கட்ட
யாத்திரை அமைகிறது. மணிப்பூரில் இருந்து 67 நாட்கள் பேருந்து மூலமாக இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். மொத்தம் 6,713 கிமீ இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு முதலில் மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அனுமதி மறுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கட்டுப்பாடுகள் விதித்து ராகுல் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது மணிப்பூர் அரசு. இதனையடுத்து மணிப்பூரில் இருந்து இன்று ராகுல் காந்தி தமது யாத்திரையை தொடங்கினார்.

Manipur is not a part of India? Rahul Gandhi Asks PM Modi

தெற்கு மணிப்பூரின் தெளபால் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று பேசியதாவது: மணிப்பூரின் லட்சக்கணக்கான மக்கள் பேரிழப்புகளை எதிர்கொண்டு நிற்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி ஆறுதல் சொல்லக் கூட இங்கே வரவில்லை. உங்கள் கண்ணீரைத் துடைக்க, உங்களின் கரம் பற்றி அரவணைத்து ஆறுதல் சொல்லவில்லை பிரதமர் மோடி. ஒருவேளை பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என நினைக்கிறார்களோ? உங்கள் வலி அவர்களுடைய வலியாக உணர்ந்து கொள்ளப்படவில்லையே.

ஆனால் மணிப்பூரி மக்களின் துயரத்தையும் வலியையும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் காயங்களையும் வருத்தங்களையும் உள்வாங்கிக் கொள்ளவும் முடிகிறது. இந்த மாநிலத்தில் எங்களால் அமைதியையும் நல்லிகணத்தையும் எங்களால் கொண்டு வர முடியும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக பேசிய காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியால் கடலில் பயணம் செய்ய முடியும். கடலுக்குள் மூழ்குவதற்கு நேரத்தை செலவிட முடியும். ஆனால் மணிப்பூருக்கு அவரால் வர முடியாது. பாஜக, மதத்தையும் அரசியலையும் ஒன்றாக்கிவிட்டது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+