மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்: காலை 10 மணி வரை 12 சதவீத வாக்குகள் பதிவு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகி உள்ளன.
60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 5 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மணிப்பூரின் 38 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 173 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 35 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் 4 பேர் பெண்கள். பாஜகவில் 36 பேர் ஆண்கள், 2 பேர் பெண் வேட்பாளர்கள். நாகா மக்கள் கட்சி 24 ஆண்களையும் 3 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.
மணிப்பூரில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்தது. மாநில முதல்வரும் ஹென்காங் தொகுதி எம்எல்ஏவுமான பைரேன் சிங் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அது போல் தொங்கம் பிஸ்வஜித் சிங், சட்டசபை சபாநாயகர் கெம்சந்த் சிங், துணை முதல்வரும் என்பிபி வேட்பாளருமான யும்நம் ஜோய்குமார், மணிப்பூர் காங்கிரஸ் கட்சித் தலைவர் என் லோகேஷ் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
மொய்ராங்கில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சி, நலனே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக, காங்கிரஸ், என்பிபி ஆகியன போட்டியிடுகின்றன. பாஜக சார்பில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் வென்ற புக்ரெம் சரத்சந்திர சிங் இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
அது போல் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த மய்ரெம்பம் பிரித்விராஜ் தற்போது பாஜக உறுப்பினராக போட்டியிடுகிறார். அது போல் நாகா மக்கள் கட்சியின் சார்பில் தொங்கம் சாந்தி சிங்கும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம், தரமான சாலைகள் உள்ளிட்டவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. தலைநகர் இம்பாலில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமம் லம்லய் சட்டசபை தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 5 பேர் போட்டியிடுகிறார்கள், காங்கிரஸ், பாஜக, அதவாலே கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மணிப்பூரில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகி உள்ளன. இம்பால் கிழக்கு: 9.8%, இம்பால் மேற்கு: 10.7%, பிஸ்னுபூர்: 12.1%, சூரசந்த்பூர்: 5.3%, கங்போக்பி: 13.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications