40 நாட்கள்.. பாஜக ஆளும் மணிப்பூரில் ஓயாத வன்முறை- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம்!
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கும் மேலாக இன வன்முறை நீடித்து வருவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே பெரும் வன்முறை தொடருகிறது. கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வன்முறை 40 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இரு இனக்குழுவினருமே வாழ்விடங்களில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குக்கி அகதிகள், மிசோரம் மாநிலத்துக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதேபோல் நாகாலாந்து மாநிலத்திலும் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காடுகளில் உயிர்தப்பி பதுங்கி உள்ளனர். மைத்தேயி- குக்கி இரு குழுவினருமே ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இம்மோதல்களின் அடுத்த கட்டமாக மாநில, மத்திய அமைச்சர்களின் வீடுகள் மணிப்பூரில் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. மேலும் மணிப்பூரில் வன்முறைக்கு காரணமே பாஜக என குற்றம்சாட்டி உள்ளூர் பாஜக தலைவர்களின் வீடுகள், உள்ளூர் பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலத்தில் முகாமிட்டு அமைதி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் மத்திய அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பது கடும் சர்ச்சையையும் எழுப்பி இருக்கிறது.
இந்நிலையில் மணிப்பூர் வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,. ஜனநாயக நாட்டில் வெறுப்பு, வன்முறைக்கு இடமே இல்லை. வெறுப்பும் வன்முறையும்தான் இப்போதைய மணிப்பூர் வன்முறைக்கு காரணம். இந்த வன்முறை சம்பவங்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications