மணிப்பூர் வன்முறை: 3 பெண் நீதிபதிகள் குழு- வெளி மாநில அதிகாரிகள் விசாரணை- உச்சநீதிமன்றம்!
டெல்லி: இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை பார்வையிட உயர்நீதிமன்ற 3 முன்னாள் பெண் நீதிபதிகள் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்றும் விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது மணிப்பூர் மாநில டிஜிபி ரவீந்தர் சிங் நேரில் ஆஜராகி இருந்தார்.

இன்று உச்சநீதிமன்ற விசாரணையின் போது மணிப்பூர் மாநிலா அரசால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்: மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 12 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 12 முதல் தகவல் அறிக்கைகள் மீது சிபிஐ விசாரணை நடத்தும்.
மேலும் 8 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு இதர முதல் தகவல் அறிக்கைகள் மீது விசாரணை நடத்தும். இந்த சிறப்பு விசாரணை குழுக்களுக்கு எஸ்.பி அளவிலான அதிகாரிகள் தலைமை வகிப்பர். சிறப்பு விசாரணை குழுக்கள் விசாரணையை துணை டிஐஜி கண்காணிப்பார். மணிப்பூர் மாநில டிஜிபி சிறப்பு விசாரணை குழுக்களின் விசாரணை முன்னேற்றத்தை கண்காணிப்பார். இவ்வாறு மணிப்பூர் அரசு தெரிவித்தது.
இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகள்:
- மணிப்பூர் மாநிலத்தில் விசாரணைகளுக்கு அப்பால் நிவாரணம் உள்ளிட்டவைகளை கண்காணிக்க 3 முன்னாள் உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
- ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆஷா மேனன், ஷாலினி பி ஜோஷி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
- மணிப்பூரில் சிபிஐ விசாரணை நடத்தும் குழுவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெறுவர்.
- மணிப்பூர் சம்பவங்கள் தொடர்பான சிபிஐ விசாரணையை ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கண்காணிப்பார்.
- தேசிய பாதுகாப்பு முன்னாள் துணை ஆலோசகரும் மகாராஷ்டிரா முன்னாள் டிஜிபியுமான Dattatray Padsalgikar மணிப்பூர் சிபிஐ விசாரணைகளை கண்காணிப்பார்.
- சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணையை வெளிமாநிலத்தைச் சேர்ந்த டிஐஜி நிலை அதிகாரிகள் மேற்பார்வையிடுவர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications