ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் மன்மோகன்சிங்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார் மன்மோகன்சிங். தற்போதைய நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

இதனால் மன்மோகன்சிங் ராஜ்யசபாவுக்கு எந்த மாநிலத்தில் தேர்வு செய்யப்படுவார் என்பது விவாதப் பொருளாக இருந்தது. ஒருகட்டத்தில் தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்கை தேர்ந்தெடுக்க திமுகவின் உதவியை கேட்டது காங்கிரஸ்.
திமுகவைப் பொறுத்தவரையில் 3 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை மதிமுகவுக்கு ஒதுக்கிவிட்டது. அதனால் காங்கிரஸ் கோரிக்கை குறித்து பரிசீலித்து வந்தது.
முன்னாள் பாரதப் பிரதமர்
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 6, 2019
மாண்புமிகு உயர்திரு. மன்மோகன்_சிங் அவர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும்
மேல் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். pic.twitter.com/rZi8jaSacy
முதலில் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய ஒப்புக் கொண்டது திமுக. பின்னர் திடீரென பல்டி அடித்தது, இதனால் காங்கிரஸ் மேலிடம் திமுக மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் மன்மோகன்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபாவில் மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து மன்மோகன்சிங் விமர்சனங்களை முன்வைப்பார் என்பதை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications