'மெளனச் சாமி' மன்மோகன் தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம்: கமல்நாத்
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் வாய் மூடி மவுனமாக இருந்ததுதான் அரசின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மற்றும் காங்கிரஸ் தோல்விக்கும் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த பேட்டியில் கமல்நாத் கூறுகையில்: தகவல் பரிமாற்றம் இல்லாததுதான் அரசின் பிரச்சனைகளுக்கு மூல காரணம். பிரதமர் வாய் மூடி மவுனமாக இருந்ததால் தகவல் பரிமாற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மன்மோகன்சிங் பலவீனமான பிரதமர் இல்லை, அவரை சோனியாகாந்தி தனது விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டி வைக்கவும் இல்லை. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் அடைந்த தோல்வி தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.

2ஜி ஊழல் குற்றச்சாட்டு வந்த உடனேயே, அதுகுறித்து உரிய விளக்கத்தை மக்கள் முன்பாக பிரதமர் வைத்திருக்க வேண்டும். அமைச்சர்களும் அதை செய்ய தவறிவிட்டனர். மக்களுடனான தகவல் பறிமாற்றத்தில் ஏற்பட்ட சுணக்கம்தான் காங்கிரசின் தேர்தல் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
உணவு, வேலைபாய்ப்பு, நிலம் உரிமை சட்டங்களை காங்கிரஸ் அரசு கொண்டுவந்தபோதிலும், அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது ஒரு அரசின் கடமை, இதில் காங்கிரசை புகழ என்ன இருக்கிறது என்ற மனநிலையில்தான் மக்கள் இருந்துள்ளனர். இந்த தேர்தலில் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் காங்கிரசுக்கு எதிராக அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications