மத்திய அமைச்சர் பாரிகர் உள்பட 10 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு
லக்னோ: பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிகர் உள்பட 10 பேர் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிகர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது பாரிகருக்கு பாதுகாப்புத் துறையை அளித்தார். பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பாரிகர் உத்தர பிரதேசத்தில் காலியாக இருந்த ராஜ்யசபா பதவிக்கு போட்டியிட்டார்.

உத்தர பிரதேசத்தில் காலியாக இருந்த 10 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாரிகர், சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ், மாநில அமைச்சர் ஆசம் கானின் மனைவி தஸீன் பாத்திமா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர், ரவி பிரகாஷ் வர்மா, ஜாவித் அலி கான், சந்திரபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜாராம், வீர் சிங், காங்கிரஸைச் சேர்ந்த பி.எல். பூனியா ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு 6 சீட்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 , காங்கிரஸ், பாஜகவுக்கு தலா ஒரு சீட்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளரான பூனியாவுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications