சுயேச்சைகளை வளைத்தது பாஜக.. கோவாவில் ஆட்சியமைக்கிறது.. முதல்வராகிறார் பாரிக்கர்
கோவாவில் ஆட்சி அமைக்க மனோகர் பாரிக்கர் ஆளுநரிடம் உரிமை கோரினார். கோவா சட்டசபை தேர்தலில் 13 இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான பலத்தை சுயேச்சைகளிடமிருந்து பாஜக பெற்றுள்ளது.
பனாஜி: கோவாவிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. அங்கு 2வது இடத்தை அது பெற்றிருந்தாலம் கூட சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கிறது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அதே வேளையில், கோவாவில் பாஜக முதல்வராக இருந்த லட்சுமிகாந்த் பர்சேகர் மட்டுமின்றி அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கிய அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர்.

இந்த நிலையில் சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 பேரின் ஆதரவை பெற்றுள்ளது பாஜக. இதையடுத்து மாநில ஆளுநர் மிருதுருஷா ஷாவை சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் தான் அரசமைக்க போவதாக ஆளுநரிடம் தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனக்கு ஆதரவாக உள்ள 22 எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் அளித்தார்.
உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து கோவாவிலும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே பாணியை அது மணிப்பூரிலும் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications