ஒரே குழப்பம்: பெங்களூரில் பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்ட பெரும் குழப்பம் காரணமாக பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை மாலை பெங்களூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் பெரும் பதட்டம் நிலவியது.
இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ, மாணவியர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

144 தடை
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்பட 16 பகுதிகளில் திங்கட்கிழமை விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று வரை நீடிக்கிறது. இதனால் அப்பகுதிகளில் பதட்டமாக உள்ளது.

பள்ளிகள்
கலவரத்தை அடுத்து இன்று பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்று தனியார் பள்ளிகள் குழம்பின. இதையடுத்து 50 சதவீத தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள்
பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டாலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் வீட்டிலேயே இருந்து கொண்டனர்.

பயம்
புதன்கிழமை பள்ளிகளை திறக்கலாம் என்று பெங்களூர் துணை கமிஷனர் வி ஷங்கர் அறிவித்துள்ளார். ஆனால் திங்கட்கிழமை நடந்த சம்பவங்களால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பெங்களூரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பவில்லை என்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளோம் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications