”கீர்த்திசக்ரா” விருது பெற்றார் பதன்கோட் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் ஜெகதீஷ் சந்த்!
டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் தாக்குதலில் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரரான ஜெகதீஷ் சந்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், ராணுவத்தில் வீரதீர செயல்கள் புரிந்த வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜெகதீஷ்க்கு கீர்த்தி சக்ரா வழங்கப்பட்டது. ஜெகதீஷ் சார்பில் அவரது மனைவி விருதினை பெற்றுக் கொண்டார். கலோனல் எம்.என்.ராய்க்கு சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் ராய் கொல்லப்பட்டார். அவரது தாய் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.
இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் நடைபெற்ற தேடுதல் பணியில் பங்கெடுத்த ஹவில்தார் டன்கா குமார் லிம்பு என்ற வீரருக்கு சூர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உயிரிழந்த இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சூர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications