குஜராத்தில் விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து.. 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சோகம்
ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது

24 பேர் பலி: இதில், விளையாட்டு திடலில் இருந்த பலரும் தீ விபத்தில் சிக்கினர். பலரும் குடும்பத்தோடு வந்திருந்ததால், குழந்தைகள், பெண்களும் தீ விபத்தில் சிக்கி மரண ஓலமிட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்: ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க குஜராத் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பூபேந்திர படேல்: "ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கபட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகம் முழு வீச்சில் பணியாற்றி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியிருப்பதாவது:- "காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
வழக்குப்பதிவு செய்யப்படும்: விளையாட்டு திடலில் எரிந்த தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வரை 24 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. சோலன்கி பகுதியை சேர்ந்த யுவராஜ் சிங் என்பவருக்கு சொந்தமானது இந்த விளையாட்டு திடல். அலட்சியமாக செயல்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்திய பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம்: தீ விபத்துக்கான காரணம் தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தீ விபத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட விளையாட்டு திடலுக்கு பாஜகவின் உள்ளூர் தலைவரும் எம்.எல்.ஏவுமன தர்ஷ்தித் ஷா சென்றார். அங்கு மீட்பு பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷித் ஷா,
வரலாற்றில் முதல் முறை: "ராஜ்கோட்டில் மிகவும் சோகமான சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்து இருப்பது ராஜ்கோட் வரலாற்றில் இது முதல் முறையான சோக நிகழ்வு ஆகும். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கைஎடுக்கும். தற்போதைக்கு மீட்பு பணியில் தான் அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது" என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications