காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை... மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு
பெங்களூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கனஅடி வரை நீர் வரத்து வர வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, சிக்மக்ளூர், வயநாடு உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அது போல் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி மற்றும் வால்பாறை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

குடகு மற்றும் சிக்மக்ளூர் ஆகிய பகுதிகளில் 200 முதல் 300 மி.மீ. மழை பெய்தது. வயநாட்டில் 200 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்திலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கனஅடி வரை நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. பவானிசாகர் அணை இன்னும் சில நாட்களில் நிரம்பவுள்ளது. இது நீண்டநாட்களுக்கு பிறகு நடக்கும் நிகழ்வாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications