ம.பி. போலீஸ் தேர்வில் மீண்டும் சர்ச்சை... ஒரே அறையில் இரு பாலருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த அவலம்
மத்திய பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கான மருத்துவ பரிசோதனை ஒரே அறையில் இரு பாலருக்கும் செய்தனர்.
போபால்: மத்திய பிரதேசத்தில் காவலர் பணிக்கான மருத்துவ பரிசோதனையை ஒரே அறையில் இரு பாலருக்கும் செய்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் காவலர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின்போது ஆண், பெண் இருவருக்கும் ஒரே அறையில் சோதனை நடத்தப்பட்டது. ஆண்கள் வரிசையில் உள்ளாடையுடன் நின்று கொண்டு அவர்களது உயரம் மற்றும் மார்பளவு எடுக்கப்பட்டது.

பெண் மருத்துவர்கள்
அதே இடத்தில் பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு எடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. மேலும் அந்த மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் யாரும் இல்லை. ஆண் மருத்துவர்களே பெண்களுக்கும் சோதனை செய்தனர்.

அனைத்து குழுவுக்கும்
இது தொடர்பாக புகாரின் பேரில் பிந்த் மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அனைத்து மருத்துவ குழுவுக்கு நாங்கள் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம்.

பெண் மருத்துவர்கள்
மாவட்ட மருத்துவமனையில் மொத்தம் 4 பெண் மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். இதனால் மேலும் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியரை மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்தில் நிறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் போலீஸ் காவலர் பணிக்கான தேர்வின்போது மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் மார்பில் அவரவர் சமூக குறியீட்டை எழுதியது தொடர்பாக இரு நாட்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக இரு அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications