விஸ்வரூபம் எடுத்த சர்வதேச தண்ணீர் பிரச்சினை.. காவி நிற ஜெர்சி குறித்த வீண் பேச்சு.. மெகபூபா முஃப்தி
Recommended Video
ஸ்ரீநகர்: சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தண்ணீருக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தண்ணீர் பிரச்சினை குறித்து டைட்டானிக் திரைப்பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்திருந்தார்.

அது போல் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியும் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சர்வதேச தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். சென்னை நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் நாம் கிரிக்கெட் அணியின் சீருடை குறித்து பேசி வருகிறோம். நிறம் விஷயத்தில் நாம் நமது முழு ஆற்றலை செலவிடுகிறோம்.
தவறான, தேவையில்லாத பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம் என மெகபூபா தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது.
அப்போது வழக்கமான நீல நிற சீருடைக்கு பதிலாக ஆரஞ்சு நிற சீருடை அணியும் என இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கிரிக்கெட் அணியை காவிமயமாக்கும் முயற்சி என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications